Skip to main content

தேனுகாசுரன் வதம்



தேனுகாசுரன் வதம்



தமது பால பருவ (பௌகண்ட) லீலைகளை வெளிப்படுத்துகின்ற காலகட்டத்தில் பலராமரும், கிருஷ்ணரும் ஒரு நாள் தமது ஆநிரை களை மேய்த்துக்கொண்டு எழில்மிக்க குளமுடையதும், மனதினை வசீகரிக்கக் கூடியதுமான ஒரு வனத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள் தமது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட் டனர். விளையாண்ட களைப்பின் மிகுதியினால் பகவான் பலராமர் ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடியின் மீது தனது தலையினை வைத்துப் படுத்துக்கொள்ள பகவான் கிருஷ்ணர் அவரது பாதங்களைத் தடவிக்கொடுத்தார். பிறகு மற்றொரு சிறுவனின் மடியில் கிருஷ்ணர் தனது தலையினை வைத்துப்படுத்துக்கொள்ள, அவரது பாதங்களை வேறொரு சிறுவன் தடவிக் கொடுத்தான். இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், தமது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ தாமா, சுபலன், ஸ்தோக கிருஷ்ணன் போன்றோரும், பிற சிறுவர்களும் கிருஷ்ண பலராமரிடம், "கோவர்தன மலைக்கு அருகில் தாளவனம் என்று ஒரு

பகுதி இருப்பதாகவும், அங்கே மிக்க இனிமையுடைய பல்வேறு கனி மரங்கள் இருப்பதாகவும், ஆனால் கழுதை வடிவம் கொண்ட, அழிப்பதற்கு அரிய, தீய தேனுகாசுரன் என்று ஒருவன் அவ்வனத்தில் வசிப்பதினால் அங்கு செல்வதற்கு எல்லோரும் அஞ்சுகின்றனர் என்றும், யாரேனும் ஒருவர் தேனுகாசுரனைக் கொன்றுவிட்டால், நாம் எல்லோரும் அங்கு போய் பல்வகையானப் பழங்களைப் பறித்து உண்ணலாம்" என்றும் கூறினர். இதனைக் கேட்டவுடன் பகவான் பலராமரும் கிருஷ்ணரும், தமது நண்பர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக உடனே தாளவனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தாள வனத்தினை அடைந்தவுடன், பகவான் பலராமர், அங்கிருந்த மரங்களை உலுக்கி ஏராளமான ஈச்சம்பழங்களை விழச் செய்தார். இதனைக் கண்டு அங்கிருந்த தேனுகாசுரன் பலராமரைத் தாக்குவதற்காக மிகவும் வேகமாக ஓடிவந்தான். ஆனால் பலராமனோ ஒரு கையால் அவனது பின்னங்கால்களைப் பற்றித் தூக்கிச் சுழற்றி ஒரு மரத்தின் மீது வீசி அவனைக் கொன்றார். இதனைக் கண்டு ஆத்திரங்கொண்ட தேனுகாசுரனின் நண்பர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் தாக்க ஓடி வந்தனர். கிருஷ்ணரும், பலராமரும் அவர்களை ஒவ்வொருவராகப் பிடித்து உயரே தூக்கி எறிந்து கொன்றனர். இவ்வாறு எல்லோரையும் கொன்ற பிறகு கிருஷ்ணரும், பலராமரும் தமது நண்பர்களுடன் ஆயர்பாடிக்குத் திரும்பினர். அங்கே அவர்களை யசோதையும், ரோகிணியும் தமது மடியின்மீது தூக்கி வைத்துக் கொண்டு அன்புடன் முத்தமிட்டு மகிழ்ந்தனர். அவர்களுக்கு சுவையான உணவளித்து, சுகமாக நித்திரை கொள்ளச் செய்தனர்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


தேனுகாசுரன் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆன்மீக அறியாமையையும் மற்றும் பௌதிக புத்தி கூர்மையையும் குறிப்பதாக பக்திவினோத தாகூர் தெரிவிக்கிறார்.

ஹரே கிருஷ்ண!

 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...