Skip to main content

சிவபெருமானுடைய வாகனம் - நந்தி



சிவபெருமானுடைய வாகனம் - நந்தி

(ப்ரஹ்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ண ஜென்ம காண்டம் - அத்தியாயம் 36 )

வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


சிவபெருமானுடைய வாகனமான நந்திதேவருடைய தோற்றம் பற்றி ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணருடைய உடலின் இடது பாகத்திலிருந்து எவ்வாறு ஸ்ரீமதி ராதா ராணி மற்றும் கோபர்கள், கோபிகைகள் அவதரித்தனர் என்பது பற்றி பிரம்ம காண்டத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல அழகான பசுக்கள், காளைகள், உயரிய ரக சுரபி பசுக்கள் மற்றும் காமதேனு போன்றவைகளும் பகவான் கிருஷ்ணரின் உடலிலிருந்து தோன்றின. அதிலிருந்து ஆயிரம் சிங்கங்களுக்கு சமமான ஒரு காளையை பகவான் கிருஷ்ணர் தேர்வு செய்து, சிவபெருமானுக்கு அவருடைய வாகனமாக இருக்க வழங்கினார். பகவான் கிருஷ்ணரின் உடலிலிருந்து தோன்றிய காரணத்தால், நந்தி தேவர், பகவான் கிருஷ்ணரின் விரிவாங்கமாகவே கருதப்படுகிறார். இது பின்வரும் கதையில் விளக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் நலன் கருதி, ஒரு முறை சிவபெருமான், பல தொல்லைகள் செய்துகொண்டிருந்த "திரிபுராசுரன்" என்ற அரக்கனோடு யுத்தத்தில் ஈடுபட்டார். ஆனால் சிவபெருமான் மிகுந்த கர்வத்துடன் இருந்தார். மூவுலகையும் அழிக்கும் தன்னோடு, மின்மினிப்பூச்சி போல் இருக்கும் இந்த அசுரன் நிச்சயமாக தோற்று விடுவான் என்று எண்ணினார். ஆனால் ஆச்சர்யமளிக்கும் விதமாக அந்த அசுரன் மிகவும் பலசாலியாக இருந்தான். ஒரு வருடம் இரவு பகலாக யுத்தம் செய்தும் இருவராலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. திரிபுராசுரன், தன்னுடைய மாய சக்தியை பயன்படுத்தி வானில் பறந்தான். சிவபெருமானும் அவனுக்கு நிகராக பறந்து சண்டையிட்டார். இவ்வாறாக ஆகாயத்தில் நடந்த ஒரு மாத சண்டையின் போது, அவன் சிவபெருமானுடைய தேர், வில் மற்றும் அணைத்து ஆயுதங்களையும் துவம்சம் செய்தான். மிகவும் சினம் கொண்ட சிவபெருமான், அவருடைய முஷ்டியால், அவன் மார்பில் வேகமாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத திரிபுராசுரன், மயங்கி விழுந்தான். எனினும் சுதாகரித்துக்கொண்டு வேகமாக எழுந்து சிவபெருமானை திருப்பி பலமாக தாக்கினான். சிவபெருமான் தோல்வியை தழுவும் நிலையை அடைந்து விட்டதை பார்த்த தேவர்கள் பதற்றம் அடைய ஆரம்பித்தார்கள். சிவபெருமான், பகவான் கிருஷ்ணரை நோக்கி பிரார்த்திக்க ஆரம்பித்தார். தான் ஆபத்தில் இருப்பதை நன்கு உணர்ந்து, பகவானிடம் சரணடைந்தார். உடனடியாக பகவான் கிருஷ்ணர் ஒரு அழகிய காளை வடிவம் எடுத்து, சிவபெருமானை முதுகில் தூக்கினார். மேலும் சிவபெருமானுக்கு கவசத்தையும் திரிசூலத்தையும் வழங்கினார். பகவான் வழங்கிய திரிசூலத்தை எடுத்து சிவபெருமான் திரிபுராசுரனை தாக்கினார். அவன் பஸ்பமாகி மண்ணில் விழுந்தான்.

தன்னுடைய ஆணவமே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த சிவபெருமான், அகங்காரத்தை துறந்து பகவானை பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

இந்த சம்பவத்தை ராதாராணியிடம் கூறிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் , பின்வருமாறு கூறினார்:

"ததோ அஹம் வ்ரிஷ ரூபேண வஹாம்ய தேன தம் ப்ரியம்
மம ப்ரியதமோ நாஸ்தி திரைலோக்கியேஷு சிவாத் பரஹ"

அன்று முதல் சிவனுடைய வாகனமாக, சிவனை நான் தூக்கி செல்கிறேன்.ஏனெனில் மூவுலகங்களில் சிவனை தவிர , எனக்கு பிரியமானவன் வேறு யாரும் இல்லை".


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...