Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினைந்தாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினைந்தாம் அத்தியாயத்தின் மஹிமை



பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.


🔆🔆🔆🔆🔆🔆🔆


பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 15 பற்றிய வர்ணனை

சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".

கௌடதேசத்தில், நரசிம்ஹா என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் தேவர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு மிகவும் சக்தி கொண்டிருந்தார். அவருடைய படைத்தளபதியின் பெயர், ஸரப்மெரூன். அவன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தான். அவனும் இளவரசனும் சேர்ந்து அரசரை கொள்ள திட்டமிட்டனர். ஆனால் அவன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே, காலரா நோய் வந்து இறந்து போனான். அடுத்த பிறவியில் அவன் சிந்து தேசத்தில் ஒரு குதிரையாக பிறந்தான். அந்த குதிரை மிக அழகாகவும், வேகமாக ஓடக்கூடியதாகவும் இருந்தது. ஒரு முறை கௌடதேசத்தில் இருந்து சிந்து தேசத்திற்கு வந்த ஒரு வணிகர், இந்த குதிரையை பார்த்தவுடன், மிகவும் கவரப்பட்டு அதை வாங்கி தன் அரசரிடம் விற்கலாம் என்று முடிவு செய்தார். குதிரையை வாங்கிய கையுடன், கௌடதேசத்திற்கு வந்து உடனடியாக அரண்மனைக்கு அரசரை காண விரைந்தார். காவலர்களிடம் அனுமதி பெற்று அரண்மனைக்குள் நுழைந்த வணிகர், அரசரை காண சென்றார். அரசர் அவரிடம், "தாங்கள் எதற்காக இங்கு வந்துளீர்கள் ?" என்று வினவினார். அதற்கு வணிகர், "அரசே! நான் ஒரு வியாபார விஷயமாக சிந்து தேசத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு உயர்ரக அழகிய குதிரையை பார்த்தேன். அந்த குதிரைக்கு நிகர் இந்த உலகில் வேறெதுவும் இல்லை. மிக அதிக விலை கொடுத்து அதை வாங்கி வந்தேன்" என்று கூறினார். இதை கேட்ட அரசர், "அப்படியா! உடனடியாக அந்த குதிரையை கொண்டு வாருங்கள். நான் காண வேண்டும்" என்று உத்தரவிட்டார். குதிரை அரசர் முன்பு கொண்டுவரப்பட்டது. அதை பார்த்த அரசர், மிகவும் கவரப்பட்டு அதை பரிசோதித்த பிறகு, வாங்க முடிவு செய்து, வணிகரிடம் அவர் வேண்டிய பணத்தை தாராளமாக கொடுத்தனுப்பினார்.

சிறிது நாட்களுக்கு பிறகு, வேட்டைக்கு செல்ல நினைத்த அரசர், அந்த குதிரையில் சென்றார். காட்டிற்குள் ஒரு அழகிய மானை கண்டா அரசர், அதனை துரத்த ஆரம்பித்தார். மானும் உயிருக்கு பயந்து மிகவும் வேகமாக ஓடியது. மானை துரத்தி சென்ற அரசர், தன் உடன் வந்த வீரர்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தார். களைப்பினாலும் தாகத்தினாலும், அரசர் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தார். குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டிவிட்டு தானும் ஒரு பாறையின் மேல் அமர்ந்தார். அப்போது காற்றில் அடித்துவரப்பட்ட ஒரு காகிதத்தோல் அவர் அமர்ந்திருந்த பாறையின் அருகில் வந்து விழுந்தது. அதில், ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் பாதி ஸ்லோகம் எழுதப்பட்டிருந்தது. அரசர் அதை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். அவர் வாயிலிருந்து ஸ்லோகத்தின் முதல் சப்தம் வந்தவுடனேயே, குதிரை தரையில் விழுந்து தன் உயிரை விட்டது. நித்தியமான நான்கு கரங்கள் கொண்ட நாராயண ரூபத்தை அடைந்து வைகுந்தத்திலிருந்து வந்த புஷ்பக விமானத்தில் அமர்ந்து வைகுந்ததை நோக்கி சென்றது.

நடந்தவைகளை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்த அரசர், இதை பற்றி யாரிடம் விளக்கம் கேட்பது என்று யோசித்தார். அப்போது அருகில் ஒரு அழகிய ஆசிரமம் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தார். அங்கு தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திய ஒரு பிராமணர் இருப்பதை கண்டா அரசர், அவரை வணங்கி விட்டு, அவரிடம், "எவ்வாறு எனது குதிரை வைகுந்ததை அடையும் பாகியதை பெற்றது?" என்று பதிவோடு வினவினார். விஷ்ணுஷர்மா என்ற பெயருடைய அந்த பிராமணர், அரசரிடம், "அரசே! சிறிது காலத்திற்கு முன் உங்கள் படைத்தளபதியாக இருந்த ஸரப்மெரூன், இளவரசனுடன் சேர்ந்து உங்களை கொல்ல திட்டமிட்டான். ஆனால் அவன் காலரா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். அடுத்த பிறவியில் குதிரையாக பிறந்த அவன் விதிவசத்தால் தங்களிடம் மீண்டும் வந்து சேர்ந்தான். இப்போது நீங்கள் வாசித்த ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தை அவன் கேட்டதன் வாயிலாக, அவன் வைகுந்ததை சென்றடைந்தான்" என்று விளக்கினார்.

பிராமணரை வாங்கங்கி விடைபெற்ற அரசர், நாட்டிற்கு திரும்பி தினமும் அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஸ்லோகங்களை படிக்கச் ஆரம்பித்தார். சிறிது காலத்திற்கு பிறகு, தன் மகனை கௌடதேசத்தின் அரசராக அறிவித்து விட்டு, தான் வனத்திற்கு புறப்பட்டார். அங்கு தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தினை படித்தார். அதன் மூலம் விரைவாக பகவானின் திருப்பாதங்களை அடைந்தார்.


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...