Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்


ஶ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

ஶ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 9 பற்றிய வர்ணனை

சிவபெருமான் கூறினார், எனதன்பு பார்வதியே, "ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தின் மகிமைகளை நான் இப்போது கூறுகிறேன்".

நர்மதா நதிக்கரையில் மஹிஷ்மதி என்ற ஊரில், மாதவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களின் அணைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, உயர்தர பிராமணராக விளங்கினார். கற்றறிந்த பிராமணர் என்ற காரணத்தினால், அவருக்கு நிறைய தானம் கிடைக்கும். தானத்தின் மூலம் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு பெரிய யாகம் செய்ய திட்டமிட்டார். யாகத்தின் ஆகூதிக்காக ஒரு ஆட்டை கொண்டு வந்தார் அவர். யாகத்திற்கு பலர் வந்திருந்தனர். யாகத்தின் போது அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஆடு மிகவும் சப்தமாக சிறிது விட்டு பேச துவங்கியது. அது, "ஓ பிராமணரே, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சியில் கொண்டு சேர்க்கும் இத்தகைய யாகங்களால் என்ன பலன்? பல யாகங்களை செய்தவன் நான். இருந்தும் நான் பெற்றிருக்கும் உடலை பார்த்தாயா?" என்று கேட்டது. ஆட்டின் கதையை கேட்க அனைவரும் ஆவலாயிருக்க, பிராமணர் ஆட்டிடம் சென்று மிகவும் பணிவுடன், "நீ எவ்வாறு ஆட்டின் உருவம் பெற்றாய்? உன்னுடைய முந்தைய ஜென்மத்தில் நீ யாராக இருந்தாய்? என்ன காரியங்கள் செய்தாய்?" என்று வினவினார்.

ஆடு கூறியது , "பிராமணரே, என்னுடைய முந்தைய ஜென்மத்தில் நானும் ஒரு பிராமணனாக பிறந்தேன். வேத சாஸ்திரங்களை கற்றறிந்து அதன்படி அணைத்து காரியங்களையும் செய்து வந்தேன். ஒருமுறை என் மகன் கடும் நோயினால் அவதிக்குள்ளானான். இதை தாங்கமுடியாத என் மனைவி, யாகம் வளர்த்தி ஒரு ஆட்டினை பலி கொடுத்தால் மகனுக்கு நோய் குணமாகும் என்று கூறினாள். அவளின் பேச்சை கேட்ட நானும், இதற்கு சம்மதித்து ஒரு ஆட்டை கொண்டு வந்தேன். துர்கை அம்மன் கோவிலில் யாகம் வளர்த்தி பலி கொடுக்கும் நேரத்தில் அந்த ஆடு எனக்கு சாபம் அளித்தது. "இரக்கமற்றவனே, தாழ்ச்சியானவனே, உன் மகனை காப்பாற்றுவதற்காக, என் குட்டிகளுக்கு தந்தை இல்லாமல் செய்கிறாயா? நீ அடுத்த பிறவியில் ஆடாக பிறப்பாய்" என்று கோபத்துடன் சபித்தது. நானும் இறந்ததும் ஆட்டின் உடலை பெற்றேன். இருப்பினும் பகவானின் கருணையால் என் முந்தைய ஜென்மம் நினைவு உள்ளது. நான் மேலும் ஒரு கதையை கூறுகிறேன் கேட்பாயாக. எவருக்கும் முக்தி கொடுக்கக்கூடிய குருக்ஷேத்ராம் என்னும் இடத்தில், சந்திரசர்மா என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் சூரிய வம்சத்தை சேர்ந்தவர். ஒருமுறை சூரிய கிரஹணத்தின் போது மன்னர் தானம் வழங்க விரும்பினார். அதற்காக, வேதியரோடு குளத்திற்கு சென்று நீராடிய பிறகு, அரண்மனைக்கு திரும்பி புத்தாடை உடுத்தி அழகாக திலகமிட்டார். பின்னர் ஒரு தகுதியான பிராமணரை அழைத்து தானம் வழங்கினார். மன்னர் அளித்த தானத்தில் மிகவும் அழகற்ற ஒரு சூத்திரனும் இருந்தான். தானம் வழங்கியவுடன், அந்த சூத்திரனின் உடம்பிலிருந்து ஒரு சண்டாளன் (நாய் உண்பவன்) தோன்றினான். சிறிது நேரம் கழித்து ஒரு சண்டாளியும் தோன்றினாள். இருவரும், திடீரென்று அந்த பிராமணரின் உடம்பிற்குள் புகுந்துவிட்டனர்.

இதை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிராமணர் சிறிதும் சஞ்சலமடையாமல், பகவான் கோவிந்தரை மனதில் இருத்தி ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிக்கத்துவங்கினார். நடப்பதை அனைவரும் வாயடைத்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கையில், விஷ்ணுதூதர்கள் அங்கே வந்து, அந்த இரண்டு சண்டாளர்களையும் விரட்டினர். மிகவும் ஆச்சரியமடைந்த மன்னர், பிராமணரிடம், "ஓ பிராமணரே, அந்த இரண்டு சண்டாளர்களும் யார்? தாங்கள் என்ன மந்திரம் ஓதினீர்கள்? யாரை நினைத்துக்கொண்டீர்கள்?" என்று வினவினார். அதற்கு அந்த பிராமணர், "பாவங்களின் மொத்தமாக ஒரு சண்டாளனும் அபராதத்தை உருவமாக இன்னோரு சண்டாளியும் தோன்றினார்கள். அவர்கள் தோன்றியவுடன், நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒண்டதாம் அத்தியாயத்தை படிக்கச் ஆரம்பித்தேன். இது எல்லா விதமான பயங்களிலிருந்தும் நம்மை காப்பாற்ற வல்லது. ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிப்பதன் மூலமாக, பகவான் கோவிந்தரின் தாமரை பாதங்களை எப்பொழுதும் தியானிக்க முடியும்" என்று பதிலளித்தார்.
மிகவும் மகிழ்ந்த மன்னர், தனக்கும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை வாசிக்க கற்று தரும்படி பிராமணரிடம் வேண்டினார். பிராமணரும் அவ்வாறே செய்தார். நாளடைவில் மன்னர் பகவான் கோவிந்தரின் தாமரை பாதங்களை சரணடைந்தார்.

இந்த கதையை ஆட்டிடமிருந்து கேட்ட மாதவன், ஆட்டை விடுவித்துவிட்டு தானும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிக்கச் ஆரம்பித்தார். அவரும் பகவானின் தாமரை கமலங்களை அடைந்தார்


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...