Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 14 பற்றிய வர்ணனை

சிவபெருமான் கூறினார், " எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".

சிம்ஹல்துவிப் என்ற ஊரில் விக்ரம் வேதாளா என்ற அரசன் இருந்தார். ஒரு முறை அவர் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும்போது தன் மகனையும் தந்து இரண்டு வேட்டை நாய்களையும் அழைத்து சென்றார். காட்டை அடைந்ததும், ஒரு முயலை துரத்தி பிடிக்குமாறு உத்தரவிட்டு ஒரு வேட்டை நாயை அவிழ்த்துவிட்டார். தானும் பின் தொடர்ந்தார். நாய் துரத்துவதை கண்ட முயல் மிக வேகமாக ஓடியது. பார்ப்பதற்கு அது ஓடுகிறதா அல்லது பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஓடியது. வெகு தூரம் ஓடிய பிறகு முயல் ஒரு ஆசிரமத்தை அடைந்தது. அந்த இடம் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. அங்கு ஒரு மான் மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. குரங்குகள் அந்த மரத்தின் பலன்களை சுவைத்துக்கொண்டிருந்தன. புலி குட்டிகள் யானை குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. பாம்புகள் மயில் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தது.அந்த ஆசிரமத்தில் வட்சர் என்ற மாமுனிவர் வசித்து வந்தார். அவர் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை படித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபாடு செய்வார். அவருடைய சீடர்களில் ஒருவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை வாசித்தவாறே தன் கால்களை கழுவிவிட்டு சென்றார். அந்த இடம் ஈரமானது. வேகமாக ஓடிவந்ததன் காரணமாக முயல் அந்த இடத்தில வழுக்கி விழுந்தது. உடனடியாக அது தேவ ரூபத்தை அடைந்தது. சிறிது நேரத்திற்குள் முயலை தேடி வந்த வேட்டை நாயும் அந்த இடத்தில கால் வைத்ததும் தன் உடலை விடுத்தது தேவ ரூபத்தை அடைந்தது. இரண்டும் தேவலோகத்தை நோக்கி சென்றன. இவையனைத்தையும் கண்ட அந்த சீடர் பலமாக சிரித்தார். அப்போது அங்கு வந்து அரசரும் நடந்த நிகழ்வுகளை கண்டு மிகவும் ஆச்சர்யமுற்று, "முயலும் நாயும் தேவலோகம் சென்றதை நான் கண்கூடாக பார்த்தேன். இது எவ்வாறு சாத்தியம்?" என்று வினவினார். அந்த சீடர், "இந்த ஆசிரமத்தில் மாமுனிவர் வட்சர் வசித்து வருகிறார். அவர் தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவர். தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிநானகாம் அத்தியாயத்தை வாசிப்பவர். நான் அவருடைய சீடன். அவருடைய கருணையால் நானும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிநானகாம் அத்தியாயத்தை வாசிக்கிறேன். எனது பாதங்களை கழுவிய நீர் முயல் மாற்றும் நாயின் உடலில் பட்டதன் காரணமாகத்தான் அவை விடுதலை அடைந்து தேவலோகம் சென்றது" என்று கூறினார். மேலும், "நான் எதற்காக சிரித்தேன் தெரியுமா. அதற்கான காரணத்தை இப்போது கூறுகிறேன். மகாராஷ்டிரா மாநிலத்தில், பிரத்துதுக் என்ற ஊரில் கேசவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் கொடூரமானவர். அவருடைய மனைவியான விலோபானாவும் மிகவும் தவறான காரியங்கள் செய்பவள். வேறு ஆண்களுடன் தொடர்புடையவள். இதன் காரணமாக கேசவா அவளை கொன்று விட்டார். அவரும் இறந்து விட்டார். இந்த பிறவியில் அவள் உங்களுடைய வேட்டை நாயாகவும், கேசவா முயலாகவும் பிறந்தார்கள்", என்று கூறினார்.

சிவபெருமான் கூறினார், "அந்த சீடரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிநானகாம் அத்தியாயத்தின் மகிமையை கேட்டறிந்த அரசரும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிநானகாம் அத்தியாயத்தை படிக்கச் துவங்கினார். உயிர் நீத்த பிறகு வைகுந்தம் சென்று பகவான் விஷ்ணுவின் பாதகமலங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றார்."


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...