Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை



பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 17 பற்றிய வர்ணனை


சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் எல்லையற்ற மகிமைகளை நீ கேட்டறிந்தாய். இப்போது பதினேழாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி கூறப்போகிறேன்".

அரசர் காடபஹூவின் மகனான இளவரசரிடம் துஷசன் என்ற முட்டாள் சேவகன் இருந்தான். அவன் ஒரு முறை இளவரசரிடம் தான் அந்த மத யானை மீது ஏறி சவாரி செய்வதாக சவால் விட்டான். அதன் படியே அவன் யானை மீது ஏறி அமர்ந்தான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், அந்த யானை மிகவும் ஆபத்தானது என்றும் ஆகையால் அவனை கிழே இறங்குமாறும் அவனிடம் வேண்டினர். அனால் துஷசன் அதை பொருட்படுத்தாமல் மிகுந்த உரத்த குரலில் கத்தியும் அங்குசத்தால் பலமாக குத்தியும் யானையை முன்னேறி செல்லுமாறு ஆணையிட்டான். பொறுமை இழந்த யானை, மதம் பிடித்து வேகமாக ஓடிஏ ஆரம்பித்தது. நிலை தடுமாறிய துஷசன், யானையின் மீதிருந்து தறியில் வீழ்ந்தான். கிழே விழுந்த அவனை, யானை தன் காலால் மிதித்து கொன்றது. அதன் பிறகு துஷசன் ஒரு யானையாக சிம்மலதீபின் அரண்மனையில் பிறந்தான். அந்த அரசர், வேறொரு அரசருக்கு அந்த யானையை பரிசாக கொடுத்தார். அதை அவர் ஒரு புலவருக்கு பரிசாக வழங்கினார். அந்த புலவர் மால்வாவின் அரசரிடம் அந்த யானையை நூறு பொற்காசுகளை விற்றார். ஆனால் சிறிது காலத்திலேயே அந்த யானை ஒரு குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டது. ஆகையால் உணவருந்தவும், தண்ணீர் குடிக்கவும் கூட்ஸ் மறுத்தது. யானை பாகன்கள் இந்த செய்தியை உடனே அரசரிடம் தெரிவித்தனர். அரசர் உடனடியாக யானை கொட்டகைக்கு, சிறந்த கால்நடை மருத்துவருடன் சென்றார். அப்போது அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், யானை பேச துவங்கியது. "அரசே! நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர். அணைத்து வேதங்களையும் அறிந்தவர். பகவான் விஷ்ணுவை எப்போதும் தியானித்து கொண்டிருப்பவர். ஆகையால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு ஆத்மாவிற்கு மருத்துவரோ, மருந்துகளோ, தானமோ , தர்மமோ எதுவும் பலனளிக்கப்போவதில்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவ வேண்டும் என்று எண்ணினால் , தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாத்தை படிப்பவரை என் முன் கொண்டு வாருங்கள்" என்றது.

யானையின் வேண்டுகோள் படி, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை படிக்கும் ஒரு பெரும் பக்தரை கொண்டு வந்தார். அந்த பக்தர் யானையின் முன்பு நின்று பதினேழாம் அத்தியாயத்தின் ஸ்லோகங்களை உச்சரித்தபடியே, யானையின் மீது தண்ணீர் தெளித்தார். யானை அந்த நொடியே தன் உயிரை விட்டு, பகவான் விஷ்ணுவின் நான்கு கரம் ரூபத்தை அடைந்தது. புஷ்பக விமானம் மூலம் வைகுந்தம் செல்ல தயாராக இருந்த யானையிடம், மால்வாவின் அரசர், அதன் முற்பிறவி பற்றி வினவினார். தான் முற்பிறவியில் துஷசன் ஆக பிறந்து இறந்த கதையை கூறி முடித்த யானை, வைகுந்தம் நோக்கி புறப்பட்டது. சிறந்த மனிதனான மால்வாவின் அரசரும், அன்றிலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை தினமும் படித்து வந்தார். வெகு விரைவில் அவரும் பஹ்கவானின் திருப்பாதங்களை அடைந்தார்.


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...