Skip to main content

பகவத் கீதை நான்காம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

பகவத் கீதை நான்காம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

பகவத் கீதை நான்காம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் வர்ணனை பற்றி கூறுகிறேன். கேட்பாயாக".

கங்கை நதிக்கரையிலுள்ள காசி (பனாரஸ்) என்னும் ஊரில் விஸ்வநாதர் கோவிலில், பரதர் என்னும் துறவி வாழ்ந்து வந்தார். மிகுந்த பக்தியுடன் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து வந்தார். முன்னொருநாளில் பரதர் பாதயாத்திரை சென்றபொழுது, தபோதன் என்னும் ஊரிலுள்ள பகவான் கிருஷ்ணரை தரிசிக்க சென்றார். தரிசனம் முடிந்ததும் சற்று ஓய்வெடுக்க எண்ணின அவர் இரண்டு வில்வ மரங்களை பார்த்தார். அதன் நிழலில் ஓய்வெடுக்கலானார். ஒரு மரத்தின் வேர்களை தன் தலைக்கு அடியிலும் இன்னொரு மரத்தின் வேர்களை தன் கால்களுக்கு அடியிலும் வைத்துக்கொண்டு உறங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றதும், இந்த இரண்டு மரங்களும் பட்டுப்போக துவங்கின.

ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் இரண்டு மரங்களும் முழுவதுமாக பட்டுபோய் இறந்து விட்டன. அந்த இரண்டு மரங்களிலும் இருந்த இரண்டு ஆத்மாக்கள் அடுத்த பிறவியில் ஒரு உன்னதமான பிராமணருக்கு மகள்களாக பிறந்து வளர்ந்தனர். அவர்களுக்கு ஏழு வயதிருக்கும்போது ஒருமுறை காசிக்கு பாதயாத்திரை சென்றனர். அப்போது பரத மஹாராஜாவை சந்தித்த அவர்கள் சற்றும் தாமதிக்காமல் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் இனிமையான குரலில், "பரத மஹாராஜாவே, உங்களுடைய கருணையினால் தான் நாங்கள் இருவரும் மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றோம்" என்று கூறினர்.

மிகவும் வியப்படைந்த பரத மகாராஜா, "அன்பான குழந்தைகளே, நான் எப்போது உங்களை சந்தித்தேன்? நான் எப்போது உங்களுக்கு விடுதலை அளித்தேன்? அதோடு நீங்கள் எவ்வாறு மரத்தின் உருவம் பெற்றேர்கள்? எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாது. தயை கூர்ந்து விளக்கமளியுங்கள்"என்று புரியாமல் வினவினார். அந்த இருவரும் முதலில் தாங்கள் எவ்வாறு மரத்தின் உருவம் பெற்றார்கள் என்று கூற துவங்கினர்.

அவர்கள், "பரத மகாராஜா, கோதாவரி நதிக்கரையில் சின்னபாப் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் சஞ்சதப்பா என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார்; கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். ஆகையால் அவர் முழுவதுமாக தூய்மையடைந்திருந்தார். தன் புலன்கள் அனைத்தையும் அவரால் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார்.

பிரம்மதேவர் தினமும் சஞ்சத்தப்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். சஞ்சத்தப்பாவும் விளக்கமளிப்பார். இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த இந்திரதேவருக்கு, சஞ்சத்தப்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு சஞ்சதப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயம் இந்திரனுக்கு ஏற்பட்டது. இந்திரன் உடனே தேவலோகத்து அப்சரசுகளாக இருந்த எங்கள் இருவரையும் அழைத்து, சஞ்சத்தப்பாவின் தவத்தை கலைக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

இந்திரனின் ஆணையை ஏற்று நாங்கள் இருவரும் கோதாவரி நதிக்கரையிலுள்ள சஞ்சத்தப்பாவின் ஆசிரமத்தை வந்தடைந்தோம். சஞ்சத்தப்பாவின் புலன்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் விதத்தில் நாங்கள் இருவரும் பாடிக்கொண்டே அவரை சுற்றி நடனமாடினோம். அவ்வாறு நாங்கள் எங்களை மறந்து ஆடிக்கொண்டிருக்கையில் எங்களது ஆடைகள் விலகி மார்புகள் வெளியே தெரிந்தது. உடனடியாக சஞ்சதப்பா தன் கையில் நீரை எடுத்து, "நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் வில்வ மரங்களாக மாறுவீர்கள்" என்று சபித்தார். இந்த சாபத்தை சற்றும் எதிர்பாராத நாங்கள் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினோம். நாங்கள், "தயை கூர்ந்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இந்திரனின் சேவகர்கள்" என்று மன்றாடினார்கள். அவர்களுடைய பணிவை கண்டு மனமுறுகிய ரிஷி, நாங்கள் எங்களுடைய பூர்வ ஜென்மத்தை நினைவு கொள்வோம் என்றும், மஹாராஜா பரதர் எங்களை விடுவிப்பார் என்றும் ஆசி வழங்கினார்.

"பரத மஹாராஜா, தாங்கள் தபோவனத்திற்கு வந்தபொழுது, எங்களின் மரத்தடியிலேயே ஓய்வெடுத்தீர்கள். அப்போது நீங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்தீர்கள். நாங்களும் அதை கேட்டோம். ஆதன் பலனால் மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றோம். அதோடல்லாமல் பௌதிக ஆசைகள் எங்களிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டது" என்று தங்கள் கதையை கூறி முடித்தார்கள்.

பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, அந்த இரண்டு பெண்களின் கதையை கேட்ட பரத மஹாராஜா மகிழ்ச்சியடைந்தார். அவர்களில் வாழ்த்திவிட்டு தன் ஆசிரமத்திற்கு திரும்பின்னர். அந்த இரண்டு பெண்களும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து என் பாத கமலங்களின் சேவையை பெற்றனர்". 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...