Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் உலக நன்மைக்காக உள்ள ஓரே ஒரு உன்னத இலக்கியம்


 

உலக மக்கள் அளவுக்கதிகமான பௌதிகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோபத்தைத் தூண்டும் மிகச்சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும், ஒருவன் மற்றொருவனைத் தாக்குகிறான். ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்குகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை. இதுவே தொல்லைகள் நிறைந்த இக்கலி யுகத்தின் சட்டமாகும். எல்லா வகையான இழிவான செயல்களாலும் சூழ்நிலை ஏற்கனவே கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது. இதை எல்லோரும் நன்கறிவர். புலன் இன்பத்திற்குரிய பௌதிக கருத்துக்கள் நிரம்பிய தேவையற்ற இலக்கியங்கள் பல உள்ளன. பல நாடுகளில், ஒழுக்கக்கேடான இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் தடை செய்வதற்காக அரசாங்கத்தால் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கமோ, பொதுமக்களின் தலைவர்களோ இத்தகைய இலக்கியங்களை விரும்பவில்லை என்பதையே இது குறிக்கிறது. இருப்பினும் புலன் இன்பத்திற்காக மக்கள் அவற்றை விரும்புவதால் அவை கடைத்தெருவில் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் எதையாவது படிக்க விரும்புகின்றனர் (அது ஒரு இயற்கையான சுபாவமாகும்). ஆனால் அவர்களுடைய மனங்கள் அசுத்தமாக இருப்பதால், அவர்கள் நூல்களைப் படிக்க விரும்புகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்றதொரு உன்னத இலக்கியம் பொதுமக்களுடைய நேர்மையற்ற செயல்களைக் குறைத்துவிடும். அத்துடன் விறுவிறுப்பான நூல்களைப் படிக்க வேண்டுமென்ற அவர்களது எண்ணத்திற்கு உணவாகவும் இது விளங்கும். ஆரம்பத்தில் அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில், மஞ்சள் காமாலையால் துன்பப்படுபவன் கற்கண்டை சாப்பிடத் தயங்குகிறான். ஆனால் மஞ்சள் காமாலையைப் போக்கும் ஒரே மருந்து கற்கண்டுதான் என்பதை நாம் அறிய வேண்டும். அதைப் போலவே, பகவத் கீதையையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் படிப்பதை பொதுமக்கள் விரும்புபடிச் செய்வதற்கான முறையான பிரசாரம் செயற்படுத்தப்பட வேண்டும். இது மஞ்சள் காமாலையைப் போன்ற புலனின்பம் என்ற நோய்க்கு, கற்கண்டைப் போல் அருமருந்தாக செயற்படும். மக்களுக்கு இந்த இலக்கியத்தில் ஒரு சுவை ஏற்பட்டுவிட்டால், சமூகத்திற்கு விஷத்தை அளிக்கும் மற்ற நூல்கள் தானாகவே மறைந்துவிடும்.


( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீமத்பாகவதம் 1.5.11) 

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...