இந்திரத்யும்ன மஹாராஜ கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை 🔆🔆🔆🔆🔆🔆 ஜேஷ்ட மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி தினத்தில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோரை, சுதர்ஷனத்துடன் கர்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஒரு மேடையில் அமர்த்துவர். பின்னர் இவர்கள் தங்க கலசங்களின் புனிதநீரை கொண்டு விமர்சையாக நீராட்டுவர். நீராட்டு முடிந்த பின்னர், பகவான் ஜெகந்நாதர் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார். இந்த நீராட்டு விழாவை தேவர்களும் விமர்சையாக கொண்டாடுவர். பிரம்மாவின் தலைமையில், அனைத்து தேவர்களும் பாரிஜாத மலரின் சாரை கொண்ட நறுமண கங்கை நீரை தங்களது சிரசின் மேல் சுமந்து வந்து பகவானை கோலாகலமாக நீராட்டுவர். பின்னர் தங்களது பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்வர். அனைத்து தேவர்களும் இந்த விழாவை சவுகரியமாக காணவேண்டும் என்பதற்காக இந்திரத்யும்ன மஹாராஜர் பெரிய பந்தலை நிர்மாணம் செய்தார். மேலும் பகவான் அமர்த்தப்ப...